Advertisement

மும்பையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது

By: Nagaraj Fri, 03 Mar 2023 9:52:47 PM

மும்பையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது

மும்பை; பொதுத் தேர்வு தொடங்கியது... மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 21-ந் தேதி தொடங்கியது.

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 15.7 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். மும்பை கல்வி மண்டலத்தில் மட்டும் 3½ லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

மும்பையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வமாக தேர்வு எழுதினர். மாணவர்கள் காலை 10.30 மணிக்கு தேர்வறையில் உட்கார அனுமதிக்கப்பட்டனர்.

exam,general,schools,yesterday, ,தேர்வு, மாணவர், மாநிலம், வகுப்பு

அவர்களுக்கு 11 மணிக்கு வினாத்தாள் சரியாக வழங்கப்பட்டது தேர்வு தொடங்கியது. 25-ந் தேதி தேர்வு முடிகிறது முதல் நாளான நேற்று மராத்தி, இந்தி, தமிழ், உருது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்பாட தேர்வுகள் நடந்தது.

காலை 11 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 2 மணிக்கு முடிந்தது. மதியம் 3 மணிக்கு பிரஞ்சு தேர்வு நடந்தது. இன்றும் (வெள்ளிக்கிழமை) மொழிப்பாடத்தேர்வுகள் நடந்தது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 25-ந் தேதி முடிவடைகிறது.

Tags :
|