போக்குவரத்து விதிகளை மீறி நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திய நடிகருக்கு அபராதம்
By: Nagaraj Mon, 20 Feb 2023 10:12:05 AM
மும்பை: மும்பையில் நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திய நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் தனது பெற்றோருடன் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சொகுசு காரில் சென்ற அவர், போக்குவரத்து விதிகளை மீறி காரை ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தியுள்ளார். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து போலீசார் அங்கு வந்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறியதாக கார்த்திக் ஆர்யனுக்கு அபராதம் விதித்தனர். மேலும், கார்த்திக் ஆர்யன் இருந்த காரின் படத்தையும் போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதில் நடிகர் வந்த காரின் நம்பர் பிளேட் எண்ணை போலீசார் மறைத்து வைத்துள்ளனர். மேலும், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.