சாவில் கூட நியாயம் இல்லை... உ.பி. பாலியல் வன்கொடுமை குறித்து நடிகர் கவின் டுவிட்
By: Monisha Wed, 30 Sept 2020 5:28:43 PM
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளநிலையில் இது குறித்து நடிகர் கவின் 'சாவில் கூட நியாயம் இல்லை என்று டுவிட் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். அது மட்டுமின்றி அவரது நாக்கு அறுக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அந்த இளம்பெண் நேற்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இந்த மரணத்தை அடுத்து அவசர அவசரமாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் சம்மதம் கூட இல்லாமல் போலீசார் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நீதி விசாரணை செய்ய உபி முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறிய நடிகர் கவின், 'சாவில் கூட நியாயம் இல்லை’ என்று ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது இந்த டுவீட்டுக்கு ஆதரவு குவிந்து வருகின்றன.
இதே சம்பவத்தை கண்டித்து நடிகை வரலட்சுமியும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.