காப்பகத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி
By: Monisha Fri, 12 June 2020 4:39:30 PM
கொரோனா வைரஸ் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்து உதவி செய்து வருகிறார்.
இதற்கிடையே அவர் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் திடீரென ஒரு சில குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் தீவிர சிகிச்சை காரணமாக குணமடைந்து மீண்டும் காப்பகத்திற்கு திரும்பினர். இந்த நிலையில் தற்போது ராயபுரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 42 குழந்தைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை கேட்டதிலிருந்து தான் மிகவும் வருத்தத்துடன் இருப்பதாகவும் அந்த காப்பகங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தனது குழந்தை போல் எண்ணி அவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதே போல் மற்றவர்களும் அந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.