Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதை பொருள் விவகரத்தில் ஜாமீனில் வெளிவந்தார் நடிகர் சித்தாந்த் கபூர்

போதை பொருள் விவகரத்தில் ஜாமீனில் வெளிவந்தார் நடிகர் சித்தாந்த் கபூர்

By: vaithegi Tue, 14 June 2022 09:33:05 AM

போதை பொருள் விவகரத்தில் ஜாமீனில் வெளிவந்தார் நடிகர் சித்தாந்த் கபூர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அதில் விருந்தில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் சிலரை கைது செய்து, அவர்களை அழைத்து சென்று சோதனைக்காக அவர்களின் ரத்தமாதிரி எடுக்கப்பட்டது.

அதில் 35 பேரில் 5 பேர் போதை பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. அதில் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சகோதரனுமான பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவர். போலீசார் சித்தாந்த் கபூரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் ஷ்ரத்தா கபூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருக்கு எதிராக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

drugs,siddhant kapoor,blood model ,போதை பொருள், சித்தாந்த்  கபூர்,ரத்தமாதிரி

பெங்களூரு ஓட்டலில் நடந்த தீடிர் சோதனையில் போதை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், போதை பொருட்களை உட்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி பெங்களூரு நகர கிழக்கு டி.சி.பி. பீமசங்கர் எஸ் குலெட் செய்தியாளர்களிடம் கூறும்போது, சித்தாந்த் கபூர் போதை பொருட்களை எடுத்துள்ளார் என ரத்த மாதிரிமருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தி உள்ளது.

அவர்களை முன்பே கைது செய்து, அதன் பின்னரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என நேற்று கூறினார். தொடர்ந்து அவர்களை காவலுக்கு எடுத்து விசாரிக்க இருக்கிறோம் என கூறினார். இந்நிலையில் அவர் கூறும்போது, காவல் நிலைய ஜாமீன் அடிப்படையில் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேரை விடுவித்து உள்ளோம். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு அழைப்பு விடப்படும். அதன்பேரில் அவர்கள் நேரில் வந்து ஆஜராவார்கள் என்று பெங்களூரு நகர கிழக்கு டி.சி.பி. கூறியுள்ளார்.

Tags :
|