Advertisement

அன்பிற்குரிய நண்பர்களின் மரணம் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை

By: Monisha Thu, 18 June 2020 12:45:03 PM

அன்பிற்குரிய நண்பர்களின் மரணம் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை

திரையுலகில் சமீபத்தில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த மூவரின் மரணம் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -இன் வணக்கங்கள். மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

actor simbu,dr sethu,chiranjeevi sarja,sushant singh rajput,report ,நடிகர் சிம்பு,டாக்டர் சேது,சிரஞ்சீவி சர்ஜா,சுஷாந்த் சிங் ராஜ்புத்,அறிக்கை

இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும்.

நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சுரா படம் திரையரங்கில் வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே.

எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம். வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள். இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags :