- வீடு›
- செய்திகள்›
- தற்கொலைதான் செய்து கொண்டார்... நடிகர் சுஷாந்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
தற்கொலைதான் செய்து கொண்டார்... நடிகர் சுஷாந்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
By: Nagaraj Thu, 25 June 2020 11:26:06 AM
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ். தோனி பயோபிக்கில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மரணம் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது.
இந்நிலையில், நேற்று பிரபல பாலிவுட் நடிகர் சேகர் சுமன்
#justiceforSushantforum என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகர் சுஷாந்த் சிங்
ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், சிபிஐ அதிகாரிகள்
விசாரித்தால் தான் உண்மை வெளிவரும், மும்பை போலீசார் இந்த விவகாரத்தில் சில
விசயங்களை மூடி மறைப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில்,
தற்போது வெளியாகி உள்ள இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில், நடிகர் சுஷாந்த்
சிங் ராஜ்புத் தூக்கில் தொங்கிய நிலையில், மூச்சுத் திணறி தான்
உயிரிழந்துள்ளார். வேறு எந்த வெளிப்புற அழுத்தமோ, போராட்டோமோ அவர்
மரணத்தின் போது நிகழ்ந்ததற்கான அறிகுறி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.