- வீடு›
- செய்திகள்›
- போதைப்பொருள் வி;ற்பனை செய்து 13 நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்த நடிகர் விரேன் கண்ணா
போதைப்பொருள் வி;ற்பனை செய்து 13 நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்த நடிகர் விரேன் கண்ணா
By: Nagaraj Wed, 16 Sept 2020 4:23:46 PM
13 நாடுகளில் சொத்து வாங்கி குவித்த நடிகர்... போதைப் பொருள் சப்ளை செய்து கோடி கோடியாக சம்பாதித்த நடிகர் விரேன் கண்ணா 13 நாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
கன்னட திரையுலம் போதைப் பொருள் விவகாரத்தால் கலங்கி போய் கிடக்கிறது. போதைப் பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, நடிகர் விரேன் கண்ணா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், நடிகர் விரேன் கண்ணாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.
நடிகர், நடிகைகளுக்கு ஹை பை விருந்து ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் விரேன் கண்ணாவின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது. அப்போது, போதைப் பொருள்களை நடிகர் நடிகைகளுக்கு சப்ளை செய்து பல கோடிகளை அவர் சம்பாதித்துள்ளார். அப்படி குவிந்த பணத்தை இந்தியா மட்டுமின்றி 13 நாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார் .
விரேன் கண்ணாவுக்கு 250 க்கும் அதிகமான சொத்துகள் உள்ளது . இது தவிர
டெல்லி, மும்பை, பெங்களூருவில் பிளாட்டுகளும் உள்ளன . மகாராஷ்டிரா புனேவில்
வீரேன் கண்ணா பெயரில் ஒரு பண்ணை வீடு உள்ளது . இது தவிர, 3 ஈவெண்ட்
கம்பெனிகள் உள்ளது. 5 சொகுசு கார்கள் வாங்கியுள்ளார். இவை அனைத்தும் போதை
பொருள் விற்று சம்பாதித்தாக விசாரணையில் தெரிய வந்து அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
விரேன் கண்ணாவின் போதைப் பொருள் பிசினஸில்
நடிகை, நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களின் பினாமி பணம்
முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.