நடிகர்கள் விமல், சூரியின் கார்களை பறிமுதல் செய்த போலீசார்
By: Nagaraj Fri, 31 July 2020 12:06:15 PM
கார்கள் பறிமுதல்... ஊரடங்கு சமயத்தில் தடையை மீறி நடிகர்கள் விமல் மற்றும் பரோட்டா சூரி ஆகியோர் கொடைக்கானலுக்கு வர உபயோகப்படுத்திய கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊரடங்கு சமயத்தில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை அமலில் உள்ள நிலையில், நடிகர்கள் விமல், பரோட்டா சூரி ஆகியோர் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சென்று மீன் பிடித்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியது.
இதையடுத்து இருவர் மீதும் கொடைக்கானல் போலீசார் 2 பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும்
ஏற்படுத்தியது. விமல், சூரியின் நடவடிக்கை கோலிவுட் வட்டாரத்திலும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விமல், சூரி ஆகியோர்
கொடைக்கானலுக்கு வர பயன்படுத்திய கார், ஜீப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த
போலீசார், உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என
தெரிவித்துள்ளனர்.