Advertisement

நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 12 July 2020 8:13:39 PM

நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுக்கு கொரோனா பாதிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்கை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று மாலை சுவாசப் பிரச்னை ஏற்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

aishwarya rai,aaradhya,corona,firm,treatment ,ஐஸ்வர்யா ராய், ஆராதயா, கொரோனா, உறுதியானது, சிகிச்சை

இதனால் அவர் சிகிச்சையில் உள்ளார். அவருடன் வீட்டில் அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா, பேரக்குழந்தை ஆராதயா ஆகியோரும் வசித்தனர்.

இதனால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக்கிற்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. ஆனால் ஐஸ்வர்யா, மகள் ஆராதயா, தாய் ஜெயா பச்சனுக்கு கொரோனா ரிசல்ட் நெகடிவ் என்றே வந்தது. இந்நிலையில் இன்று மதியம் வந்த மற்றொரு பரிசோதனை முடிவில் ஐஸ்வர்யா, மகள் ஆராதயா ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இதனால் பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அமிதாப் விரைவில் நலம்பெற கோவில்கள் பலவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். அமிதாப் பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவரிடம் அமிதாப் பயப்படும் படி ஏதுமில்லை லேசான அறிகுறிகளே உள்ளன என கூறியுள்ளார். அதே போல் நடிகர் கமலும் அமிதாப் விரைவில் நலம்பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Tags :
|
|