Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம் - சஞ்சய் ராவத்

நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம் - சஞ்சய் ராவத்

By: Karunakaran Fri, 11 Sept 2020 4:35:02 PM

நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம் - சஞ்சய் ராவத்

நடிகை கங்கனா ரணாவத் மும்பை மற்றும் மும்பை போலீசார் குறித்து விமர்சனம் செய்தது மகாராஷ்டிரா மந்திரிகளை ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் சிவசேனா தலைவர்கள் இடையே வார்தைப்போர் ஏற்பட்டது. நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையை தொடர்ந்து நேற்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார்.

அதன்பின் சஞ்சய் ராவத் பேட்டி அளிக்கையில், நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம். நாங்கள் அதை மறந்துவிட்டோம். நாங்கள் இப்போது எங்கள் அன்றாட அரசு மற்றும் சமூகப் பணிகளில் மும்முரமாக இருக்கிறோம். கட்சி தொடர்பான சில நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்க நான் முதல்-மந்திரியை சந்தித்தேன் என்று கூறினார்.

actress kangana ranaut,ended episode,sanjay rawat,sivasena ,நடிகை கங்கனா  ரணாவத், எபிசோட் முடிந்தது, சஞ்சய் ராவத், சிவ் சேனா

கங்கனா ரணாவத் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து சஞ்சய் ராவத்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அவர் பதிலளிக்கையில், இது தவறான தகவல். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரோ அல்லது சோனியா காந்தியோ தங்கள் வருத்தத்தை தெரிவித்து அறிக்கை வெளியிடவில்லை. நாங்கள் அவரை மும்பைக்கு வரவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொண்டோம். அவரது கருத்து மும்பை போலீசாரை அவமதிப்பதைத் தவிர வேறில்லை என்று கூறினார்.

Tags :