Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் - சஞ்சய் ராவத்

மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் - சஞ்சய் ராவத்

By: Karunakaran Mon, 07 Sept 2020 09:31:04 AM

மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் - சஞ்சய் ராவத்

சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறினார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் நடிகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. மேலும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக கங்கனா ரணாவத் பாலிவுட் நடிகர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்தார்.

தற்போது நடிகை கங்கனா ரணாவத் மும்பையை பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா மூத்த எம்.பி. சஞ்சய் ராவுத் வலியுறுத்தியுள்ளார். இங்கு வசித்துக் கொண்டு, வேலைபார்த்துக் கொண்டு யாராவது மும்பை, மகாராஷ்டிரா மற்றும் மராட்டியர்கள் குறித்து தவறாகப் பேசினால், முதலில் நான் அவர்களை மன்னிப்பு கேட்க சொல்லுவேன் என சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.

actress kangana ranaut,apologize,mumbai,sanjay rawat ,நடிகை கங்கனா ரனாவத், மன்னிப்பு, மும்பை, சஞ்சய் ராவத்

மும்பை போலீசாரை அவதூறாக பேசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏற்கனவே மாநில அரசை சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். தற்போது நடிகை கங்கனா ரணாவத் மும்பை மற்றும் மும்பை போலீசார் குறித்து கருத்து தெரிவித்ததால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மும்பையில் கங்கனா ரணாவத் வசிக்க கூடாது என மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து தற்போது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுஷாந்த் வழக்கில் மும்பை போலீசார் சரியாக செயல்படவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Tags :
|