- வீடு›
- செய்திகள்›
- போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகினியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகினியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
By: Karunakaran Fri, 04 Sept 2020 7:19:50 PM
கன்னட திரையுலகில் சில நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தகவல் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த போதைப்பொருள் பயன்பாடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், போதைப் பொருள் பயன்பாடு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பிரபல நடிகை ராகினி திவேதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ராகினி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது பெங்களூருவில் உள்ள நடிகை ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீரென சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போதைப்பொருள் விவகாரத்தில் நடிகையின் நண்பரான ஆர்டிஓ அலுவலக இன்ஸ்பெக்டர் ரவி ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று சோதனை நடைபெற்றது. நடிகை ராகினி திவேதி இதற்கு முன், ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்தில் நடிகை வீட்டில் சோதனை நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.