- வீடு›
- செய்திகள்›
- நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா மும்பை பைகுல்லா சிறையில் அடைப்பு
நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா மும்பை பைகுல்லா சிறையில் அடைப்பு
By: Karunakaran Wed, 09 Sept 2020 2:14:52 PM
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதனால் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக, ரியாவின் சகோதரர் ஷோயிக், மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ரியா போதைப்பொருள் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டு, தெற்கு மும்பையில் உள்ள போதைப்பொருள் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ரியா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த விசாரணையின் போது நடிகை ரியா அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
பின்னர் இரவு முழுவதும் போதைப்பொருள் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். இன்று காலையில் மும்பை பைகுல்லா சிறைச்சாலையில் நடிகை ரியா அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று முறையிட உள்ளார்.