சித்ரா பௌர்ணமி .. திருவண்ணாமலைக்கு கூடுதலாக 2000 பேருந்துகள் இயக்கம்
By: vaithegi Mon, 01 May 2023 1:44:09 PM
திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவிப்பு ....
தமிழகத்தில் சித்திரை மாதம் பல விசேஷ நாட்கள் வருகிறது. அன்றைய தினம் பெரிய கோவில்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். அந்த வகையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு ஏரளமான பக்தர்கள் வருவார்கள்.
மேலும் அன்றைய தினம் கிரிவலம் செல்ல வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருவர். அதனால், பேருந்துகளில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சித்ரா பௌர்ணமி தினமான வருகிற மே 5-ம் தேதி திருவண்ணாமலைக்கு மொத்தம் 2000 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது