கியூபெக்கில் பொதுமுடக்கம் குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில் அறிவிப்பு
By: Nagaraj Fri, 18 Dec 2020 09:36:40 AM
பொது முடக்கம் குறித்த கூடுதல் விபரம்... பிந்தைய கிறிஸ்மஸ் பொதுமுடக்கம் குறித்த கூடுதல் விபரங்களை கியூபெக்கின் முதல்வர் பிராங்கோயிஸ் லெகால்ட் விரைவில் அறிவிக்கவுள்ளார்.
இப்போதைக்கு, பொதுமுடக்கம் உறுதி செய்யப்பட்டவை. அனைத்தும் டிசம்பர் 25ஆம் திகதி தொடங்கி 2021 ஜனவரி 11ஆம் திகதி திட்டமிடப்பட்ட இறுதி திகதியுடன் தொடங்கும். இந்த நேரத்தில், அனைத்து அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்களும் மூடக் கட்டாயப்படுத்தப்படும்.
தற்போது, ரொறன்ரோ, பீல், யோர்க் மற்றும் விண்ட்சர்-எசெக்ஸ் பொது சுகாதார
அலகுகள் மாகாணக் கட்டமைப்பின் சாம்பல் பொதுமுடக்க மண்டலத்தில் உள்ளன.
நவம்பர்
23ஆம் திகதி தொடங்கிய ரொறன்ரோ மற்றும் பீலின் 28 நாட்கள் பொதுமுடக்கம்
டிசம்பர் 21ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது. இது நீட்டிக்கப்படுமா இல்லையா
என்பது குறித்து முதல்வர் அலுவலகம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.