- வீடு›
- செய்திகள்›
- இன்று பள்ளிகள் திறப்பு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கம் ... போக்குவரத்துத் துறை எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இன்று பள்ளிகள் திறப்பு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கம் ... போக்குவரத்துத் துறை எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
By: vaithegi Mon, 13 June 2022 08:49:19 AM
கொரோனா தொற்றுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் (இன்று) பள்ளிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், மாணவ - மாணவிகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள வழித்தடங்களில் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
பள்ளிப் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்ய வட்டாரப் போக்குவரத்துத் துறை
அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளிப் பேருந்துகளில் வேகக்
கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளி நிர்வாகங்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணம்
செய்வதற்காக வழங்கப்படும் பஸ் பாஸ் அட்டையை, ஸ்மார்ட் அட்டையாக வழங்க
ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அட்டை வழங்க படும் வரை ஏற்கெனவே
நடைமுறையில் உள்ள பஸ் பாஸ் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என
தெரிவித்துள்ளது.