- வீடு›
- செய்திகள்›
- எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்-க்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கூடுதல் அவகாசம் நாளையுடன் நிறைவு
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்-க்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கூடுதல் அவகாசம் நாளையுடன் நிறைவு
By: vaithegi Tue, 11 July 2023 11:23:35 AM
சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஆன்லைனில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது.
இதையடுத்து www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வந்தனர். ஜூலை 10ஆம் தேதியான மாலை 5 மணியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாணவ மற்றும் மாணவிகள் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் TNHealth என்ற இணையதளத்தில், நாளை மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுவரை மட்டும் 33,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.