Advertisement

நாளை விண்ணுக்கு பாய்கிறது ஆதித்யா L-1 செயற்கைக்கோள்

By: vaithegi Sat, 02 Sept 2023 09:31:27 AM

நாளை விண்ணுக்கு பாய்கிறது ஆதித்யா L-1 செயற்கைக்கோள்

இந்தியா: கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் உலகில் முதல் நாடாக நிலவில் உள்ள தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவிலிருந்து ஆதித்யா L-1 என்ற விண்கலம் நாளை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்கிறது. அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள்,

சூரியனிலிருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் இடைவெளி இன்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு அங்கிருந்து பூமிக்கு செயற்கைக்கோளின் பதிவு செய்யக்கூடிய படங்கள் அதிவேகமாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் படங்களை வைத்து பல கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடரப்படும் எனவும் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? உள்ளிட்ட பல்வேறு அரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இருக்கும் எனவும் நொடிக்கு நான்கு புகைப்படங்கள் வரை பூமிக்கு இந்த செயற்கைக் கோளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் ஆதித்யா செயற்கைக் கோளிலிருந்து வரக்கூடிய படங்கள் மற்றும் தகவல்களை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளும் தொடர் கண்காணிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

satellite,planet of scientists ,செயற்கைக்கோள்,விஞ்ஞானிகள்

இதையடுத்து இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து சூரியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளை விட ஆதித்யா செயற்கைக்கோள் அதிக தரவுகளை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
நாளை விண்ணில் செலுத்தப்படக்கூடிய ஆதித்யா எல் ஒன் காட்சிகளை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் கொடைக்கானல் வாணிய இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படுகிறது. மேலும் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் இதற்காக அனுமதியும் இலவசமாக வழங்கிவுள்ளது .

Tags :