Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டபாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டபாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

By: Nagaraj Sun, 10 Sept 2023 10:33:43 PM

ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டபாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

ஆந்திரா: சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது.

பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

isro,information,aditya l one,sun,space,exploration ,இஸ்ரோ, தகவல், ஆதித்யா எல் ஒன், சூரியன், விண்வெளி, ஆய்வு

4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 10-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், 15ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|