Advertisement

அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவை

By: vaithegi Tue, 28 Mar 2023 1:36:51 PM

அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவை

இந்தியா: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு .. எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லா மீது, காகித துண்டுகளை வீசி அமளியில் ஈடுபட்டதால், மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இரு அவைகளும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

they are,adjournment,speaker ,அவை,ஒத்திவைப்பு ,சபாநாயகர்

மேலும், மாநிலங்களவை தொடங்கியவுடன் புது டெல்லியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற நிகத் ஜரீன், லோவ்லினா, நீது மற்றும் ஸ்வீட்டி ஆகியோருக்கு ராஜ்யசபாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இதற்கு முன்னர், நேற்றய தினம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்ட்டது.

Tags :