Advertisement

சாத்தான்குளம் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

By: Nagaraj Wed, 08 June 2022 10:55:39 AM

சாத்தான்குளம் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: விசாரணை ஒத்திவைப்பு... சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் -10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. விசாரணையைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

judge,trial,adjournment,defense,filing,indictment ,நீதிபதி, விசாரணை, ஒத்திவைப்பு, பாதுகாப்பு, தாக்கல், குற்றப்பத்திரிகை

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காணொலி காட்சி மூலமாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணைக்கான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
|
|
|