நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை ... அமலாக்கத்துறை 26-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
By: vaithegi Sat, 23 July 2022 06:14:56 AM
புதுடெல்லி, 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
ஆனால் அன்று விசாரணை முடிவடையாத நிலையில், 25-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த விசாரணை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 26-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. எனினும் இந்த விசாரணை தள்ளி வைப்புக்கான எந்தவித காரணமும் அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
Tags :