Advertisement

உடல்நலக்குறைவால் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி

By: vaithegi Mon, 10 July 2023 10:37:53 AM

உடல்நலக்குறைவால் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி ... தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றது. இதையடுத்து இதில் பால்வளத் துறை அமைச்சராக நாசர் பதவி ஏற்று இயங்கி வந்தார். நாசர் பதவி ஏற்புக்கு பிறகு ஆவின் பால் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரை அதிரடியாக நீக்கினார். இதையடுத்து டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

avadi nasser hospital ,ஆவடி நாசர் ,மருத்துவமனை

மேலும் அத்துடன் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இதன் பின் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நாசர் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவரது உடல்நிலை குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

Tags :