Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடல் நலக்குறைவு காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

By: Nagaraj Wed, 25 Jan 2023 10:11:57 PM

உடல் நலக்குறைவு காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாஞ்சில் சம்பத் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு அங்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அண்ணா, திராவிடம் இல்லை என்று அமமுக தொடங்கிய போது தினகரன் கட்சியில் சேரவில்லை.

government,medical,policy,speakers, ,செயலாளர், ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத், பேச்சாளர்

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், சமீபகாலமாக திமுக கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் குறித்து பேசி வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags :
|