அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்
By: vaithegi Thu, 21 July 2022 10:16:00 AM
சென்னை: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ந் தேதி நடந்தது.
இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
இதனால் அதன்மூலம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் டெல்லியில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதிமுக வட்டாரத்தில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.