Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு

By: vaithegi Mon, 08 Aug 2022 2:23:36 PM

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு  விசாரணையை வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது பற்றி முடிவு செய்ய இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார்.

a.d.m.k. general assembly,investigation ,அ.தி.மு.க. பொதுக்குழு,விசாரணை

இதனைத்தொடர்ந்து இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கை 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் ஆஜராகவுள்ளதால் வழக்கை ஒத்திவைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று விசாரணையை வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் உத்தரவிட்டார்.

Tags :