- வீடு›
- செய்திகள்›
- அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வரும் 5ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வரும் 5ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு
By: vaithegi Sat, 03 Sept 2022 3:45:32 PM
சென்னை: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 5ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு ... பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் எனவும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் எனவும்தீர்ப்பில் கூறப்பட்டது.இதை அடுத்து ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியான நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.
இதையடுத்து அவரிடம், ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், "இன்று(நேற்று) ஐகோர்ட்டு வழங்கிய இத்தீர்ப்புக்கு, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்'' என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வரும் 5ஆம் தேதி (திங்கட்கிழமை) மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.