Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை பட்டாசு விபத்துக்களில் இருந்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

கோடை பட்டாசு விபத்துக்களில் இருந்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

By: Nagaraj Sat, 25 Mar 2023 12:10:41 PM

கோடை பட்டாசு விபத்துக்களில் இருந்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

சேலம்: கோடைகாலம் துவக்கத்திலேயே பட்டாசு மரணங்களால் மனம் கனக்கும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தீபாவளி, தசரா போன்ற முக்கியப் பண்டிகைகளில் மட்டுமே பட்டாசு வெடிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்தது. தற்போது பட்டாசுகள் மீதான மோகம் அதிகமாகி பிறந்தநாள்விழா, கோவில் திருவிழா என அனைத்து விசேஷங்களிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

அதனால் ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தியும் தடையின்றி நடந்து வருகிறது. இதனால் ஒருபக்கம் தொழிலாளார்களுக்கு வாழ்வாதாரம் உயர்வதாக இருந்தாலும் மறுபக்கம் கூடும் விபத்துக்கள் வேதனை அளிக்கின்றன.

கோடைகாலம் துவக்கத்திலேயே பட்டாசு மரணங்களால் மனம் கனக்கும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 16ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகரசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

salem,firemen,civilians,fear,incidents,accident ,சேலம், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள், அச்சம், சம்பவங்கள், விபத்து

நேற்று முன் தினம் காஞ்சிபுரம் மாவட்டம் மலைத்தோட்டம் என்ற இடத்தில் பட்டாசு உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொடிய விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்ற பட்டாசு விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் சூழலில் இதைத் தவிர்த்து பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் பட்டாசு ஆலைகளுக்கும் சேலம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சில விதிமுறைகளைப் பின்பற்றி உயிர் சேதங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

பட்டாசு உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் இதைத்தவிர வட மாநிலங்களுக்கும் பட்டாசுகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 700 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு பட்டாசு உற்பத்தி தொழிலில் நேரடியாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். விருதுநகரை தவிர தமிழகத்தில் சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை உள்பட பல இடங்களிலும் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உள்ளன. இந்த நிலையில், இதில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயமடைந்த வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் பட்டாசு தொழிற் சாலைகளில் விபத்து சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சேலம் தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
|
|