Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை... சோனியாவை சந்திக்கிறார் நிதிஷ்குமார்

மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை... சோனியாவை சந்திக்கிறார் நிதிஷ்குமார்

By: Nagaraj Thu, 13 Apr 2023 1:25:03 PM

மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை... சோனியாவை சந்திக்கிறார் நிதிஷ்குமார்

பீகார்: மெகா கூட்டணி அமைக்க ஆலோசனை... பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாகவும், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளன. அத்தகைய முயற்சியை மேற்கொள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று டெல்லி சென்றுள்ளார்.

allince,meeting,party , சந்திப்பு, சோனியா காந்தி, நிதிஷ்குமார்

சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

அவர் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல தேசிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டுவதில் காங்கிரஸ் முன்னணியில் இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

Tags :