Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீண்ட இடைவேளைக்கு பின்னர் கோவையில் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழப்பு

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கோவையில் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழப்பு

By: vaithegi Thu, 06 Apr 2023 11:03:47 AM

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கோவையில் கொரோனாவால் பெண் ஒருவர் உயிரிழப்பு

கோவை : கோவை உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுக்கு கடந்த 17-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளிருந்த அவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அங்கு அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படவே, கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டது. அதில் 55 வயது பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சிகிச்சைகளுடன் சேர்த்து கொரோனாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

coimbatore,corona,death , கோவை,கொரோனா,உயிரிழப்பு

இதனை அடுத்து நேற்று காலை 7.15 மணி அளவில் 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்ததாகவும், நுரையீரல் புற்று நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கோவிட் இருப்பது உறுதியானதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.

உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடனடியாக எரியூட்டப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பின் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது என்பது குறிப்பிடதக்கது.

Tags :
|