Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய இன்று மீண்டும் கூடுகிறது

கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய இன்று மீண்டும் கூடுகிறது

By: vaithegi Mon, 31 July 2023 10:26:28 AM

கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய இன்று மீண்டும் கூடுகிறது

இந்தியா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20 -ம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மழைக்கால கூட்ட தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

எனவே இதன் காரணமாக கடந்த ஏழு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப் போய் உள்ளது.

parliament,opposition parties ,நாடாளுமன்றம் ,எதிர்க்கட்சிகள்

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று மீண்டும் கூடுகிறது. 8-வது நாளாக இன்று, இரு அவைகளும் காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வந்து உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

Tags :