Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் ஜனவரி மாதம் மீண்டும் தொடர் விடுமுறை

மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் ஜனவரி மாதம் மீண்டும் தொடர் விடுமுறை

By: vaithegi Tue, 10 Jan 2023 3:33:54 PM

மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் ஜனவரி மாதம் மீண்டும் தொடர் விடுமுறை

சென்னை: தொடர் விடுமுறையால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி ..... தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் மாத இறுதியில் 2-ம் பருவ தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக தொடர் விடுமுறைகள் 12 நாட்களுக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இதன்பிறகு, 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2-ம் தேதி மற்றும் , ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 17-ம் தேதி உழவர் திருநாள் வர உள்ளது.

continuous holiday,pongal , தொடர் விடுமுறை,பொங்கல்

இதனால் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை தினமாக இருப்பதால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆனால் இன்னொரு புறம் போகி மற்றும் பொங்கல் பண்டிகை இரண்டும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை வர உள்ளதால், இந்த 2 நாட்கள் கிடைக்க வேண்டிய தனிபட்ட விடுமுறைகள் மிஸ் ஆவதாக மாணவர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

Tags :