Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகரில் நீண்ட நாட்களுக்கு பின் மழை... வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

விருதுநகரில் நீண்ட நாட்களுக்கு பின் மழை... வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Tue, 25 Apr 2023 7:53:14 PM

விருதுநகரில் நீண்ட நாட்களுக்கு பின் மழை... வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

விருதுநகர்: நீண்ட நாட்களுக்கு பின் மழை... விருதுநகரில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கியதில் இருந்தே பல நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஊர்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், விருதுநகரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நகரில் அனல் காற்று வீசியது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களை குளிர்விக்கும் விதமாக கோடை மழை தொடங்கி பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

happiness,public,rain,virudhunagar, ,பொதுமக்கள், மகிழ்ச்சி, மழை, விருதுநகர்

வரும் வாரத்தில் தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை குறையும் என்றும், விருதுநகர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மாலையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் 24ம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ய தொடங்கியது.

மீண்டும் காலை 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்தது. இதனால், இத்தனை நாட்களாக வெயிலில் தவித்து வந்த மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது.

Tags :
|
|