Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் முடிவு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா .. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

நீட் முடிவு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா .. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

By: vaithegi Tue, 25 Apr 2023 11:25:58 AM

நீட் முடிவு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா ..  பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இதனை அடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்த பணியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

department of education,neet,plus 2 examination ,பள்ளிக்கல்வித்துறை ,நீட் ,பிளஸ் 2 தேர்வு

மேலும் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றும் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
|