- வீடு›
- செய்திகள்›
- கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 94 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனத்தனர்
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 94 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனத்தனர்
By: vaithegi Sun, 26 June 2022 2:18:37 PM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் மட்டும் 94 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை காரணமாக, திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 411 பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டனர்.
இதில், உண்டியல் காணிக்கையாக மட்டும் மூன்று கோடியே நாற்பத்தி ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கப் பெற்றதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இலவச தரிசனத்திற்காக காத்திருப்பு அறைகள் முழுவதும் நிறைந்த நிலையில் வெளியில் நீண்ட வரிசையில் 16 மணி நேரம் காத்திருந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags :
tirupati |
devotees |