Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அட போங்கப்பா... அது புளியோதரை மாநாடு... கிண்டல் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

அட போங்கப்பா... அது புளியோதரை மாநாடு... கிண்டல் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

By: Nagaraj Wed, 23 Aug 2023 8:31:56 PM

அட போங்கப்பா... அது புளியோதரை மாநாடு... கிண்டல் செய்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு: அது புளியோதரை மாநாடு... அதிமுக மாநாடு புளியோதரை மாநாடு என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். விரைவில் கவர்னரை மக்கள் வெளியில் அனுப்புவார்கள்.

சட்டசபையில் எந்த கோப்பை கொடுத்தாலும் அதில் கையெழுத்து போடுவதுதான் கவர்னரின் பணி. டிடிஎன்பிஎஸ்சிக்கு தலைவராக சைலேந்திர பாபு நியமனத்திற்கு கவர்னர் தடையாக இருக்கிறார். கவர்னர் ரவி மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறது

aiadmk,conference,evks elangovan,interview,pulyotharai ,அதிமுக, ஈவிகேஎஸ் இளங்கோவன், புளியோதரை, பேட்டி, மாநாடு

உத்திரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. காவேரி நதிநீர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கிறோம்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|