Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது; முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது; முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

By: Monisha Mon, 14 Dec 2020 12:20:44 PM

அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது; முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக டிசம்பர் 14-ம் தேதி மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தனர்.

அதன்படி, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

election,aiadmk,consultative meeting,ministers,campaign ,தேர்தல்,அதிமுக,ஆலோசனைக் கூட்டம்,அமைச்சர்கள்,பிரச்சாரம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கின்றனர். கூட்டத்தில் அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும் பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|