Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு தீர்மானம் .. ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகள் தள்ளுபடி

அதிமுக பொதுக்குழு தீர்மானம் .. ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகள் தள்ளுபடி

By: vaithegi Fri, 25 Aug 2023 11:41:19 AM

அதிமுக பொதுக்குழு தீர்மானம்   .. ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகள் தள்ளுபடி

சென்னை: கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதன் தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதிமுகவிலிருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பன்னீர்செல்வம் ,மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி. டி. பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது ஏழு நாட்கள் நடைபெற்ற வாதம் கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது.

aiadmk general committee,appeal,o.p.s. ,அதிமுக பொதுக்குழு ,மேல்முறையீட்டு ,ஓ.பி.எஸ்.


இதையடுத்து கடந்த ஜூன் 28ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இச்சூழலில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் நிலைக்கத்தக்கதல்ல; வழக்கில் தடை விதிப்பதற்கு எந்த முகத்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|