Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு வழக்கு .. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு .. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளிப்பு

By: vaithegi Thu, 23 Feb 2023 12:28:24 PM

அதிமுக பொதுக்குழு வழக்கு  ..  உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளிப்பு

சென்னை: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் ..... அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனவே இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்டனர்.

supreme court,aiadmk general committee ,உச்சநீதிமன்றம் ,அதிமுக பொதுக்குழு

இதையடுத்து இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் போன்றோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Tags :