Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுக்குழு விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

By: vaithegi Thu, 15 Dec 2022 7:09:32 PM

அதிமுக பொதுக்குழு விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுடெல்லி: விசாரணை தள்ளிவைப்பு .... அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இன்றும் இவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. எனவே இதன்படி விசாரணைக்கு வந்த போது, நேரமின்மை காரணமாக வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கலாமா என நீதிபதிகள் கேட்டனர். அப்போது, ஈ.பி.எஸ் தரப்பில், நாளைக்கு வேண்டாம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

aiadmk general committee,investigation ,அதிமுக பொதுக்குழு,விசாரணை

மேலும், இவ்விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு காலவதியாகிவிட்டது என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டது. இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைக்கிறோம்.

இதனை அடுத்து இதற்குள் எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு இருதரப்பிற்கும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags :