Advertisement

இரு தரப்பு மோதலால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்..

By: Monisha Mon, 11 July 2022 8:00:28 PM

இரு தரப்பு மோதலால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்..

தமிழ்நாடு: இன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், காலையில் பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

அதற்கு முன்னதாக எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் பேருந்து, கார்கள் சேதமடைந்தன. மேலும் பலருக்கு மண்டை உடைந்தது. இதனால் அந்தப் பகுதியே கலவரபூமியாகக் காட்சியளித்தது.

head office,seal,violence,conflict ,பொதுக்குழு,கூட்டம்,தலைமை , சீல்,

இந்த நிலையில் எடப்பாடி தரப்பினரால் பூட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை உடைத்து பன்னீர் தரப்பினர் உள்ளே புகுந்தனர்.மேலும் கட்சி அலுவலகத்திலிருந்து பல்வேறு ஆவணங்களை ஓ.பி.எஸ் தரப்பினர் எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.இதற்கிடையே மோதல் தொடர்பாக இரு தரப்பினர்மீதும் மாறி மாறிப் புகார்கள் வழங்கப்பட்டன.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக சிறப்புரையாற்றிவருகிறார் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி.இந்த மோதலால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

Tags :
|