- வீடு›
- செய்திகள்›
- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்
By: vaithegi Sat, 15 Oct 2022 8:54:19 PM
சென்னை: நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது ... தமிழக அரசின் விதிகளின்படி 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். 6 மாத அவகாசம் அடுத்த மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17 ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.'
மேலும் அத்துடன் இந்த கூட்ட தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருக்கைகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.வரும் 17ம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இடையே சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் 2 கடிதங்களை சபாநாயகர் அப்பாவிடம் அளித்துள்ளது.