சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகும் அதிமுக
By: Nagaraj Fri, 13 Nov 2020 09:40:22 AM
அதிவேகமாக தயாராகும் அதிமுக... 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வரும் அதிமுக கட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகர் அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.பி
சி.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட
அதிமுக செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . தஞ்சை
வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வைத்திலிங்கம் எம்.பி. நியமனம்
செய்யப்பட்டுள்ளார் .
அதிமுகவின் அமைப்பு செயலாளராக எம்.எஸ்.எம் ஆனந்தன்
நியமிக்கப்பட்டுள்ளார் . விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் கிழக்கு
மாவட்ட அதிமுக செயலாளராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக கமலக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நூர்ஜஹான் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .