Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக சார்பில் தஞ்சையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அதிமுக சார்பில் தஞ்சையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

By: vaithegi Mon, 13 Nov 2023 4:09:37 PM

அதிமுக சார்பில் தஞ்சையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம்  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 – வியாழக் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

adjournment,admk,general assembly ,ஒத்திவைப்பு ,அதிமுக ,பொதுக்கூட்டம்

இந்நிலையில் தற்போது, தஞ்சையில் நவம்பர் 16-ல் அதிமுக நடத்தவிருந்த பொதுக்கூட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

4-ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டம், கனமழையால் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இம்முறை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Tags :
|