Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து ஆகஸ்ட் 17-ல் இருந்து மீண்டும் தொடங்கும்-நேபாளம் அறிவிப்பு

கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து ஆகஸ்ட் 17-ல் இருந்து மீண்டும் தொடங்கும்-நேபாளம் அறிவிப்பு

By: Karunakaran Tue, 21 July 2020 7:39:50 PM

கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து ஆகஸ்ட் 17-ல் இருந்து மீண்டும் தொடங்கும்-நேபாளம் அறிவிப்பு

நேபாளத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி விமான சேவைக்குக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன்பின் 4 நாட்களுக்கு பின் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது.

இதனால் அங்கு உள்நாடு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து ஆகஸ்ட் 17-ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் நடைபெற்றது. இதுகுறித்து சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஷிவ மாயா தும்பஹங்பே தெரிவித்துள்ளார்.

nepal,coronavirus,air traffic,august 17 ,நேபாளம், கொரோனா வைரஸ், விமான போக்குவரத்து, ஆகஸ்ட் 17

இதுகுறித்து மந்திரி ஷிவ மாயா தும்பஹங்பே கூறுகையில், அனைத்து விமானங்களும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் அங்கு விமான சேவைகள் தொடங்கவுள்ளன.

நேபாளத்தில் நேற்றைய நிலவரப்படி, அங்கு 186 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 17,844 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|