இந்தியாவில் இருந்து 1000 பொறியாளர்களை தேர்வு செய்ய உள்ள ஏர்பஸ் நிறுவனம்
By: Nagaraj Sat, 18 Mar 2023 11:33:07 AM
அமெரிக்கா: இந்திய பொறியாளர்கள் தேர்வு... ஏர்பஸ் விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து ஆயிரம் பொறியாளர்களைத் தேர்வுசெய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜெட் உற்பத்தி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் Salil Gupte, உலக அளவில் 13ஆயிரம் பேரை நடப்பாண்டில் பணிக்கு அமர்த்த ஏர்பஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்கள் குறைந்த ஊதியம் மற்றும் அதிகத் திறமை வாய்ந்த இந்திய பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார்.
ஆண்டுதோறும் சுமார் 15லட்சம் மாணவர்கள் பொறியியல் பட்டம் பெறுவதாக கூறிய Salil Gupte மேலும் தெரிவித்தார்
Tags :
interest |
boeing |