பராமரிப்பு பணிகளால் மாலை 5 மணிவரை விமானநிலைய ஓடு பாதை மூடல்
By: Nagaraj Tue, 18 Oct 2022 6:35:34 PM
மும்பை: மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை விமான நிலையம் இந்தியாவின் பரபரப்பான விமான நிலையமாகும். மும்பை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் வழியாக ஒரு நாளைக்கு சுமார் 800 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மும்பை விமான நிலையம் அதானி குழுமத்தால் தனியார்மயமாக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் நேர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதைகளிலும் பருவமழைக்கு பிந்தைய தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என மும்பை சரபதி சிவாஜி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் மகராஜ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பல விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.