Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு

ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு

By: Nagaraj Mon, 26 Dec 2022 10:10:39 PM

ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு

டெல்லி: அழைப்பு விடுக்கப்பட்டது... ஜனவரி 3ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். இந்த யாத்திரை தற்போது டெல்லியை வந்தடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன் டெல்லியில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் திமுக எம்பி கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

akilesh,mayavathi,rahul , அகிலேஷ், மாயாவதி, ராகுல், அழைப்பு, யாத்திரை

பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசனும், ராகுல் காந்தியும் உரையாற்றினர். தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால், ஒரு வார ஓய்வுக்குப் பிறகு அடுத்த கட்ட மலையேற்றம் தொடங்கும். இந்நிலையில், ஜனவரி 3ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.,சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு, ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags :