Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வகுப்புவாத விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அகிலேஷ் யாதவ் உத்தரவு

வகுப்புவாத விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அகிலேஷ் யாதவ் உத்தரவு

By: Nagaraj Sat, 18 Feb 2023 11:39:57 AM

வகுப்புவாத விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அகிலேஷ் யாதவ் உத்தரவு

பீகார்: அகிலேஷ் யாதவ் உத்தரவு... தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புவாதம் குறித்த விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவதை தவிர்க்குமாறு சமாஜவாதி கட்சி, தலைவர்களையும், தொண்டர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபகாலமாக பா.ஜ.க. அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களை திசைத்திருப்ப வகுப்புவாத விவகாரங்களைத் தூண்டி வருகிறது. பா.ஜ.க.வின் இந்த திசைத்திருப்பும் முயற்சியில் கட்சியினர் சிக்கி கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளார் என்று கட்சியின் தேசிய செயலாளர் ராஜேந்திர செளதுரி கூறியுள்ளார்.

மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. தொடர்ந்து மக்களை திசைத்திருப்பும் வகையில், அடிப்படை விஷயங்களை பற்றி பேசாமல் மத விவகாரங்களையே எழுப்பி வருகிறது. நாட்டில் பண வீக்கம் அதிகரித்து வருகிறது.

Tags :